கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தனது நண்பர்களுக்கு அதனை விற்க முயற்சித்த இளைஞர் ஒருவரை, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிகோடு காவல் நிலைய போலீசார் தலைமையில் குமாரபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தனது சக நண்பர்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala to tamilnadu ganja smuggling april


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->