ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து கேரளா மாணவர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து கேரளா மாணவர் உயிரிழப்பு.!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் மகன் தனுஷ். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் தங்கி எம்பிபிஎஸ் மருத்துவம் ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், மாணவன் தனுஷ் இன்று காலை ஸ்டான்லி குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக மாணவர்கள் தனுஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனுஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மாணவன் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, "மாணவன் தனுஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மாணவன் உயிரிழப்புகான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala student died in chennai stanli hospital


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->