ஆற்றுக்கு குளிக்கச் சென்ற பெண்.. புதருக்குள் அழைத்துச் சென்று அசம்பாவிதம்.!
Kerala men harrassment in bavani river
கோவை அருகே சுண்டபட்டி கிராமத்தின் வழியே பவானி ஆறு செல்கிறது. 33 வயது இளம்பெண் அந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேசி கொடுத்துள்ளனர்.
பின்னர் கட்டாய படுத்தி அவரை வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அதற்கு அந்த பெண் ஒத்துழைக்காத காரணத்தால் கத்தியை காட்டி மிரட்டி புதருக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேகமாக கத்தி சத்தமிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு குற்றவாளிகள் இருவரையும் பிடித்தனர். ராஜேஷ் என்ற 23 வயது நபர் மற்றும் என்ற 25 வயது நபர் இருவரும் தான் அந்த குற்றவாளிகள் என்றும் இவர்கள் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இருவரும் பவானி அணை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். ஆற்றுக்கு இளம்பெண் அடிக்கடி குறுக்கே செல்வதை நோட்டமிட்ட இவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
English Summary
Kerala men harrassment in bavani river