தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட்டுள்ள கர்நாடகா..! - Seithipunal
Seithipunal


கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது. கடந்த 11-ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என உத்​தர​விட்​டது. இதற்கு அப்போது மறுப்பு தெரி​வித்த கர்​நாடக அரசு, உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக தெரி​வித்​து இருந்தது.

அத்துடன், மைசூரு, மண்​டியா ஆகிய இடங்​களில் விவ​சாய சங்​கத்​தினர் நீர் திறக்​கக்​கூ​டாது என வலி​யுறுத்தி போராட்​டத்​தில் ஈடு​பட்​ட  நிலையில், மண்​டி​யா​வில் போராட்​டம் நடத்​திய கன்னட அமைப்​பினரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று மாலை 07 மணி நில​வரப்​படி, மைசூரு​வில் கடல் மட்​டத்​தில் இருந்து 2284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் 2282.10 அடி​யாக உள்​ளது.

அணைக்கு வினாடிக்கு 08 ஆயிரத்து 230 கன அடி நீர் வந்​து​கொண்​டிருக்​கும் நிலை​யில், அணை​யில் இருந்து தமிழகத்​துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்​து​விட‌ப்​பட்​டுள்​ள‌து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka has released 10000 cubic feet of Cauvery water to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->