கனமழை எதிரொலி.. நாளை குறிப்பிட்ட மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Karaikal and thiruvarur district school holiday tomorrow due to heavy rain
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.

மேலும் நாளை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
English Summary
Karaikal and thiruvarur district school holiday tomorrow due to heavy rain