கன்னியாகுமரி | கணவன்-மனைவி உள்பட 4 பேர் தற்கொலை முயற்சி! சிக்கிய உருக்கமான கடிதம்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 30) இவரது மனைவி ரூபா (வயது 28) இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

பிரவீன் மர வியாபாரம் செய்பவர். இவருக்கு தொழிலில் கடந்த சில நாட்களாக கடும் நஷ்டம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கடன் வாங்கினார். 

இதனால் கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியதால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என மனம் வருந்தி மனைவி ரூபாவிடம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பிரவீன் நேற்று விஷ மாத்திரைகளை வாங்கி வந்து அதனை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் பிரவீன் மற்றும் ரூபா இருவரும் விஷம் குடித்தனர். 

விஷம் குடித்த பிரவீன் திடீரென வீட்டில் கத்தி கூச்சலிட்டதால் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். 

பின்னர் இது தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயக்க நிலையில் இருந்த கணவன்-மனைவி மற்றும் 2 குழந்தைகளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீசார் விசாரணை நடத்திய போது அவர்களது வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்தது. 

அதில், தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கியதாகவும் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் இந்த முடிவை எடுத்து கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari husband wife 2 children attempted suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->