பிறக்கும் போதே பேசிக்கொண்டு பிறந்த அதிசய குழந்தை.. டாக்டர் ஆச்சர்யம்.! - Seithipunal
Seithipunal


உத்திரமேரூரில் பிரசவத்தின் போது பிறந்த ஆண் குழந்தை பேசியதாக கூறப்படுகின்ற நிலையில், அந்த அதிசய  குழந்தையை பொதுமக்கள் திரண்டு வந்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன அழிசூர் கிராமத்தில் ரேவதி என்ற பெண் பிரசவத்திற்காக கலியம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, மருத்துவர் சாய்ராஜ் மற்றும் செவிலியர் பிருந்தா ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். 

அப்போது ரேவதியின் அத்தை லதா என்பவர் பிரசவ அறையில் அவருடன் இருந்துள்ளார். சரியாக குழந்தை பிறக்கின்ற நேரத்தில் நான் வந்துட்டேன் என்ற சத்தம் அவர்களுக்கு கேட்டுள்ளது. அதன்பின் குழந்தை பிறந்து அழ ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவர் செவிலியர் மற்றும் பிரசவ அறையில் இருந்த லதா ஆகியோர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தகவல் அப்படியே காட்டுத்தீ போல பரவ அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த அதிசய குழந்தையை பார்த்துவிட்டு செல்கின்றனர். அத்துடன், மருத்துவர் சாய்ராம் மற்றும் பிருந்தா இருவருமே இந்த குழந்தை பிறக்கும் போது நான் வந்து விட்டேன் என்று சத்தம் கேட்டதே உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதனால், ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanjipuram baby Born and spoke


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->