தங்கை கணவருடன் கூடா நட்பு, கேடில் முடிந்த சோகம்.. குரங்கு மனம் தாவியதால் பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தங்கை கணவருடன் கொன்ற முறையற்ற உறவு இறுதியில் பெண்ணின் உயிரை பறித்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வரதராஜபுரம் பகுதியை சார்ந்தவர் பொன்னுரங்கம். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். செண்பகவல்லின் தங்கையான லாவண்யாவுக்கு ஜோசப் என்பவருடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்கையில் லாவண்யா இறந்துள்ளார். கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்து வந்துள்ளார். 

இதன்போது, ஜோசப்புக்கும் - செண்பகவலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. 

இந்த விஷயம் செண்பகவல்லிக்கு தெரியவரவே, இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் செண்பகவல்லிக்கும் - ஜோசப்புக்கும் இடையே தகராறு ஏற்படவே, அவர் வீடியோ பதிவு செய்து கணவருக்கு அனுப்பி தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சோமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் செண்பகவல்லியின் உடலை மீட்டு பிரேத பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், செண்பகவல்லியின் தற்கொலைக்கு ஜோசப் காரணம் என்பது உறுதியாகவே, செண்பகவல்லியின் கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

  • கூடா நட்பு கேடாய் முடியும். 
  • பிள்ளைகள் மேல் பாசம் வைத்து வளர்க்கலாம், பிள்ளைகளின் தந்தை மேல் கணவன் போல பாசம் வைப்பது நாளை எந்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர வேண்டும். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Kundrathur Woman Suicide due to Affair Man Reject 23 July 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->