உலகின் எந்த மூலையிலும் இல்லாத ஒரு அதிபயங்கரம் தமிழகத்தில்..? விபரீதம் நடக்க போவது திட்டமிட்டே மறைப்பு..!! - Seithipunal
Seithipunal


 கல்பாக்கம் அணு உலையில் சில அசம்பாவிதங்கள் நடப்பதாக தொடர்ந்து நமக்கு செய்தி வந்தவண்ணம் இருக்கிறது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்னைகளால் அச்சத்துக்கு ஆட்பட்டுள்ளனர் தொழிலாளர்கள்.

" அணுமின் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார். பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

'என்ன நடந்தது?' என்பதைப் பற்றி அணுமின் நிலைய நிர்வாகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை' என்கின்றனர் ஊழியர்கள்.

கிடைத்த தகவலின்படி, ஆயிரம் டி.ஏ.சியில் இருந்து பத்தாயிரம் டி.ஏ.சி வரைக்கும் கதிர்வீச்சு தன்மை அதிகரித்துவிட்டது என்பதுதான்.

இப்படி ஏதாவது நடந்தால், தொழிலாளர்களுக்கு உடனே டிஸ்பிளேவில் போட்டுக் காட்ட வேண்டும்.

எந்த டிஸ்பிளேவிலும் இதைக் காட்டவில்லை. 'ஆயிரம் டி.ஏ.சி ஹவர் வந்தாலே மூட வேண்டும்' என்ற விதியை அணுமின் நிலைய நிர்வாகம் மீறிவிட்டது.

அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, ' கட்டடத்தைவிட்டு(Reactor building-1) உடனே வெளியேறுங்கள்' என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அணுமின் நிலைய நிர்வாகம்.

கதிர்வீச்சு அளவு அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். காற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

இதன் காரணமாக அப்பாகுதியில் வாழும் பலரும் ரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்பாக்கத்தைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கம்பாக்கம், மணமை, பூந்தண்டலம், ஆரம்பாக்கம், உய்யாலிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் அணுமின் நிலைய ஊழியர்கள், கட்டடத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் எனச் சுமார் 20 ஆயிரம் பேர் கல்பாக்கம் பகுதிக்குத் தினமும் வந்து போகிறார்கள்.

கல்பாக்கம் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவிவருகிறது.

இதுவரையிலும் இரண்டு பேருக்கு அணுக்கதிர் வீச்சால் ஏற்படக்கூடிய ரத்தப் புற்றுநோய் (AML) வந்திருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்னர்.

'கல்பாக்கம் அணுஉலை மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறது. கல்பாக்கத்தைச் சுற்றி எவ்வித அணுக்கதிர் வீச்சும் இல்லை' என அடிக்கடி சொல்லும் நிர்வாகம், இந்தச் சம்பவங்களில் இன்னும் மௌனமாகவே இருக்கிறது.

இந்தச் சம்பவங்களைப் பார்க்கும்போது 'உண்மையில் கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பானதுதானா' என்ற கேள்வி நம்முன் வலிமையாக எழுகிறது!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kalpakkamm-nuclear-power-station-safety-measure out of control


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->