#கள்ளக்குறிச்சி: ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ஜெயராமன் டிப்ளமோ படிப்பை முடித்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி உள்ளார். 

இதில் ஜெயராமன் பல லட்சம் ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விருதாச்சலம் ரயில்வே போலீசார் உடன் இணைந்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் ரூபாய் விழுந்ததால் ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Youth suicide who lost money in online rummy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->