ஜெயலலிதா மரணத்தை அப்போதே சரியாக கணித்த நடிகை கஸ்தூரி.. வைரலாகும் ட்வீட்.!
Jayalalithaa death kasturi old tweet Viral
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 -ந்தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அப்போது முதல்வரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தது. இதில் யார் தான் குற்றவாளி என்பதை அறிவதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் 608 பாக்கம் கொண்ட விசாரனை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இதில் முக்கிய குற்றவாளியாக சசிகலா, கே.எஸ்.சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, அதாவது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறுமுக சாமியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதாவின் திட்டவட்ட இறப்பு நேரமான 2016 டிசம்பர் 4 பிற்பகல் 3.50 என்ற நேரத்தை கருத்தில் கொண்டு அவரது சகோதரர் மகன் ஜெ. தீபக் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு திதியைக் கொடுத்துள்ளார் என்று பஞ்சாங்க ஆவணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை தற்போது நினைவுகூர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி தான் பதிவு செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனவும், ஆனால் சில காரணங்களால் நான் அதை டெலிட் செய்து விட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
ஆனால் பேஸ்புக் லிங்க் மட்டும் அப்படியே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.
English Summary
Jayalalithaa death kasturi old tweet Viral