அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன் விஜய்! அவனியாபுரம் அசத்தல் ஆட்டம்! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டிகளிகள் 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு ரூ. 7லட்சம் மதிப்புள்ள நிசான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த காலை 8 மணிக்கு தொடங்கி 11 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதில், 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய். முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர் விஜய் 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார். 

காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jallikattu Avaniyapuram 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->