பக்கத்து வீட்டுக்காரருடன் நெருக்கம் : மனைவியை சுட்டுக்கொன்று கணவர்! - Seithipunal
Seithipunal


பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டறிந்த கணவன்  மனைவியை சுட்டுக்கொன்று விட்டு  அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் நிஷாத்என்பவருக்கு திருமணமாகி குடியா தேவிஎன்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கணவர் முகேஷ் நிஷாந்த் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் குடியா தேவிக்கு, பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இதுபற்றி முகேஷ் நிஷாந்துக்கு தெரியவர கடந்த வாரம் விடுமுறையில் வந்தபோது  கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை கண்டித்துள்ளார் . அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த முகேஷ் நிஷாத், நாட்டு துப்பாக்கியால் மனைவியைச் சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . பின்னர், முகேஷ் நிஷாத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intimacy with the neighbor Husband kills wife


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->