மழை நேரத்தில் கவனமாக இருங்கள்... திருச்சியில் மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி பரிதாப பலி.! காப்பாற்ற சென்ற நபருக்கும் நேர்ந்த சோகம்.!!
in Trichy husband wife died electric attack police investigaiton going on
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகேயுள்ள தாரானுர் கிராமத்தை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 36). இவரது மனைவியின் பெயர் சந்தியா (வயது 30). இவர்கள் இருவருக்கும் சந்தோஷ் என்ற நான்கு வயதுடைய குழந்தையும்., சர்வேஷ் என்ற மூன்று வயதுடைய குழந்தையும் உள்ளனர்.
சந்தியா நேற்று எப்போதும்போல வீட்டில் உள்ள வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்த நிலையில்., மகேந்திரன் வீட்டின் உள்ளறையில் இருந்துள்ளார். இந்த சமயத்தில்., திடீரென பலத்த மழையானது பெய்ய துவங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாது அங்குள்ள பகுதிகளில் அவ்வப்போது தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில்., மழையின் எதிரொலியாக வீட்டில் இருக்கும் மின்சார எர்த் வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாத சந்தியா எர்த் வயர் இருக்கும் இடத்திற்கு சென்ற நிலையில்., மின்சாரம் பாய்ந்து அலறியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரன் மனைவியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இந்த முயற்சி கணவனின் உயிரையும் - மனைவியின் உயிரையும் சேர்த்து பறித்துக்கொண்டுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரனின் சகோதரர் சக்திவேல்., இருவரையும் காப்பாற்ற முயற்சித்த நேரத்தில்., அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
சக்திவேலை பத்திரமாக குடும்பத்தார் மீட்ட நிலையில்., அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்தனர். மேலும்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இருவரின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Trichy husband wife died electric attack police investigaiton going on