மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!!
In tamilnadu have rain for tomorrow
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது இதே பகுதியில் தொடர்ந்து நிலவி வருவதன் காரணமாக., தமிழக்கத்தில் லேசான மழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி., திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்., தமிழகத்தின் தலைநகரை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் இருக்கும் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பகுதியில் இருக்கும் வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல்., மன்னார் வளைகுடா., தென்தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் மாலத்தீவில் உள்ள கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In tamilnadu have rain for tomorrow