டெலிவரி பாயா? திருட்டு பாயா?..! நிறுவனத்தின் முக்கிய இடத்தில் கைவைத்த ஊழியர்.. விசாரணையில் பகீர்.!!
in private delivery boy stolen mobile and sales privately police arrest and investigate
தமிழகத்தின் சென்னையில் உள்ள ரெட் ஹில்ஸ் பகுதியை சார்ந்தவர் வினோத் குமார். இவரது நண்பரின் பெயர் ஜான்சன். இவர்கள் இருவரும் பட்டரவாக்கம் பகுதியில் செய்யப்பட்டு வரும் இணையதள வர்த்தக மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரில் வினோத்குமார் பொருட்களை டெலிவரி செய்யும் பிரிவிலும்., ஜான்சன் நிறுவனத்துடைய அலுவலக பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். வினோத் குமாருக்கு டெலிவரிக்காக 20 பொருட்கள் கொடுக்கப்படும் பாதச்சத்தில்., 17 பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்த்து வருவார்.
மேலும்,. மீதமுள்ள 3 பொருட்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை அல்லது வாடிக்கையாளர் வெளியூர் சென்றுள்ள என்று எதாவது காரணம் கூறி மூன்று பொருட்களை மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைத்து வந்துள்ளார். இவ்வாறாக தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இவர் காரணங்களை கூறி ஒப்படைக்கப்படும் பொருட்கள் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் நிலையில்., உயர் ரக அலைபேசியை ஜான்சன் உதவியோடு திருடிவிட்டு வினோத் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதில் வரும் பணத்தை நண்பர்கள் இருவரும் சமமாக பங்கிட்டு கொண்ட நிலையில்., வரும் நாட்களில் சேமிப்பு பகுதியில் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து குறைவது நிர்வாக மேலாளர் கமலகண்ணனிற்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனையடுத்து இது குறித்து அங்குள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து., வினோத்குமார் மற்றும் ஜான்சனின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., வினோத்குமார் மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.5 இலட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும்., இவர்களிடம் இருந்த ரூ.1 இலட்சத்து 70 ஆயிரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in private delivery boy stolen mobile and sales privately police arrest and investigate