சாத்தானின் சாமியார் சேட்டைகள்.! 30 க்கும் மேற்பட்ட பெண்களை நம்பவைத்து அரங்கேற்றிய லீலைகள்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மந்திகுளம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் மந்திரவாதி என்று கூறி கொண்டு அந்த பகுதிக்கு கடந்த குடிவந்துள்ளார். அங்கு இருக்கும் மக்களிடம் தன்னிடம் மாந்திரீக சக்தி அதிகளவில் இருப்பதாகவும்., சாமி வருவது போல நடித்து அங்குள்ள மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்ற தொடங்கியுள்ளார். 

இதனை நம்பிய மக்கள் அவரிடம் குறிகேட்க செல்லும் சமயத்தில்., அங்கு வரும் மக்களிடம் ஆசையை தூண்டி அவர்களிடம் அதிகளவில் பணம் வசூல் செய்துள்ளார். இதனால் அவருக்கு பெண் பக்தர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். இவரது மகன் சினிமா துறையில் நடிப்பதாகவும்., அரசியல் தலைவருடன் அதிகளவில் நெருங்கிய பழக்கம் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றியுள்ளார். 

இதனையடுத்து இவருக்கு அதிகளவில் வந்த மக்களிடம் கஷ்டத்தை போக்குவதாக கூறியுள்ளார். அதன் மூலமாக வீட்டில் இருக்கும் பீரோவை 45 நாட்கள் பூஜை செய்தால் சாத்தானின் அருளால் கோடி கோடியாய் பணம் கொட்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அங்குள்ள மக்கள் அதிகளவில் கடன் வாங்கி பீரோவில் வைத்து வழிபட வழங்கியுள்ளார். 

சுமார் 30 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.50 இலட்சத்திற்கும் மேலாக கைப்பற்றிய மந்திரவாதி 45 நாட்கள் கடந்த பின்னரும் பீரோவை காண மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் பீரோவை கேட்கவே., அவர்களை நடித்து சமாதானம் செய்து அனுப்பியுள்ளார். மறுநாள் காலையில் சாமியார் கூறியது போன்று பீரோவை திறந்து பார்த்த மக்கள் எந்த விதமான பணமும் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து அவரது இல்லத்திற்கு சென்று பார்த்த போது., குடும்பத்தோடு வீட்டை காலி செய்து சென்றது தெரியவந்தது. இதனால் உண்மையை உணர்ந்த மக்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in madurai a fraud lord stolen peoples money and escaped


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->