போனில் பேசி விபரீத முடிவெடுத்த கணவன்..! புதுமண மகனின் முடிவால் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலத்தில் தற்கொலைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த மற்றும் தினம்தோறும் சோகத்தை ஏற்படுத்தும் விஷயத்தில் ஒன்றாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் தற்கொலை என்று பல பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்காளியை சார்ந்தவர் லாலு கிருஷ்ணா. இவர் அங்குள்ள பளுகல் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சார்ந்த பெண்ணின் பெயர் ஆர்யா. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

marriage, south indian marriage,

இந்நிலையில்., திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே ஆர்யா மேற்படிப்பிடிக்காக அகமதாபாத் சென்ற நிலையில்., லாலு தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., கணவன் - மனைவி இருவரும் அலைபேசியில் பேசி கொள்வது வழக்கம். 

சம்பவத்தன்று வழக்கம்போல தனது மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில்., நீண்ட நேரம் ஆகியும் இவரது அறையினை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே கதவை உடைத்து அறைக்குள் சென்றுள்ளனர். 

died, murder, killed, suicide attempt,

இவர்கள் அனைவரும் அறைக்குள் சென்ற போது அதிர்ச்சி தரும் காட்சியாக லாலு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் லாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாலு கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்து வந்தாக தெரிவிக்கப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari husband attempt suicide police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->