முன் பின் சென்று நொறுங்கி விபத்திற்குள்ளான கார்.. உடல் நசுங்கி பலியான பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் சத்யவாணி (வயது 61). இவரது மகன் பெயர் கோபிநாத். இவர் தமிழாண்டு மின்வாரிய உதவி பொறியாளராக திருப்பூரில் பணியாற்றி வருகிறார்.

சத்யவாணி தனது மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில்., உடல்நல குறைவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சமயத்தில்., நேற்று சத்யவானி மற்றும் அவரது உறவினர் அன்புமணி (வயது 58)., கவிதா (வயது 40) ஆகியோருடன் வேலூருக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். 

இந்த காரை ஓட்டுநர் ரமேஷ் (வயது 40) என்பவர் இயக்கிய நிலையில்., வேலூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் திருப்பூருக்கு திரும்பியுள்ளனர். இவர்களின் வாகனம் தருமபுரி மாவட்டத்தில் கணவாய் பகுதிக்கு அருகே வந்து கொண்டு இருந்தது.

dramapuri, darmapuri thopur accident,

இந்த சமயத்தில்., இவர்களின் வாகனத்திற்கு பின்னர் வந்த லாரியானது காரின் மீது பயங்கரமாக மோதவே., காரில் இருந்த மூன்று பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ரமேஷ் பரிதாபமாக படுகாயமடைந்து துடிதுடித்த நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri car lorry accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->