முன்விரோத பஞ்சாயத்து... இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த கொடூர கும்பல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 28). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் சவுமியா (வயது 26). 

இவர்கள் இருவருக்கும் 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்., அம்பேத்கார் நகரை சார்ந்தவர்களுக்கும் - மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த நபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. 

இந்த சமயத்தில் நேற்றிரவு அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில்., பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியுள்ளனர். இந்த நேரத்தின் போது அம்பேத்கார் நகர் இளைஞர்கள் - மேல்பாதி காலனி இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

murder, killed, suicide attempt,

இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில்., இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் விரட்டியடித்தியுள்ளனர். 

இந்த தருணத்தில்., சிறிது நேரம் களைத்து வேல்முருகன் அப்பகுதியில் நின்று கொண்டு இருக்கவே., அங்கு வந்த கும்பலொன்று வேல்முருகனை சரமாரியாக வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

காலை நேரத்தில் அவ்வழியாக சென்ற நபர்கள் புதரில் வேல்முருகன் இரத்த வெள்ளத்தோடு இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., தனது கணவரின் உடலை கட்டியணைத்து சவுமியா கதறியழுததும்., தந்தையின் உடலை கண்டு குழந்தைகள் அழுததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore youngster murder police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->