புதைமணலில் சிக்கிய மகன்களை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை.. நீரில் தத்தளிக்க அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகேயுள்ள நாலாந்தேத்து கிராமத்தை சார்ந்தவர் ஜீவா (வயது 48). இவரது மனைவியின் பெயர் ஜெயகாந்தி (வயது 38). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில்., ஜீவா சிதம்பரம் அரசு போக்குரவத்து கழக நடத்துனராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில்., ஜீவா தனது மகன்களை அழைத்து அங்குள்ள வெள்ளாற்று பகுதிக்கு குளிப்பதற்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த நிலையில்., புதைகுழியில் சிக்கியுள்ளனர். 

இதனையடுத்து உயிருக்காக இருவரும் அலறிய நிலையில்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜீவா விரைந்து சென்று தனது மகன்களை காப்பாற்றியுள்ளார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜீவா புதைகுழியில் சிக்கிக்கொண்டுள்ளார். 

died, killed, suicide attempt, murder,

இதனை எடுத்து ஜீவா சிறிது நேரத்திலேயே தண்ணீரில் முழ்ங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., கரையில் நின்று கொண்டு இருந்தவர்கள் ஊருக்குள் சென்று விஷயத்தை கூறி உதவிக்கு ஆட்களை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் புதைகுழியில் பிணமாக இருந்த ஜீவாவின் உடலை மீட்டுள்ளனர். இது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore man died in quick sand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->