விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி.. தந்தையும் மகளும் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் அரங்கேறும் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். சில சமயம் அதிஷ்டத்தின் மூலமாக எந்த விதமான காயமும் இன்றி மக்கள் தப்பிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

சில நேரங்களில் அரங்கேறும் விபத்துகளில் சிக்கி மக்கள் பரிதாபமாக பலியாகி., அவர்களின் குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் தந்தையும்., மகளும் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள ஆயர்மடம் தெரு பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவரது மகளின் பெயர் திவ்ய பிரியா (வயது 19). இவர் திருச்சியில் தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிலயத்திக்கு தந்தையுடன் சென்று கொண்டு இருந்தார். 

இந்த நேரத்தில்., இருசக்கர வாகனம் வேப்பூர் அருகே சென்று கொண்டு இருந்த நிலையில்., இவர்களின் பின்னால் வந்த லாரியொன்று இவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பி சென்றுள்ளது. இந்த விபத்தில் தந்தை மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலை அறிந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Cudallore girl and dad died in accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->