சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! கோவையில் பரிதாபம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜபாண்டி. இவரது மகளின் பெயர் சக்தி (வயது 16). சிறுமி சக்திக்கு 11 வயதில் சர்க்கரை வியாதி பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைக்காக சிறுமிக்கு பெற்றோர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில்., சர்க்கரை வியாதிபாதிப்பு சரியாகாமல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோர் கோயம்புத்தூரில் இருக்கும் சுக்கிரவார்பேட்டை உறவினரின் இல்லத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அழைத்து வந்துள்ளார். 

உறவினரின் இல்லத்தில் வைத்து பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இந்த தருணத்தில்., சிறுமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

Hospital,

இதனால் பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு ஊசி போட்டுள்ளனர். 

பின்னர் சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில்., இரவு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் மீண்டும் காலையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. 

இதனையடுத்து சிறுமியை பெற்றோர்கள் அங்குள்ள கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore girl died due to sugar disease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->