சிறுமியை நாடகக்காதலால் ஏமாற்றிய கொடூரன்.! இச்சை தீர்ந்த பின் வெளியான பகீர் உண்மை.. துடிதுடித்துப்போன சிறுமி.!!
in Chennai drama lover cheated girl sexual abuse police arrest
இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் நாடகக்காதல் என்ற வலையில் விழவைத்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரமும் ஒருபுறம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சென்னையில் உள்ள டி.பி.சத்திரம் பகுதியை சார்ந்த சத்யா என்பவரின் மீது 17 வயதாகும் சிறுமி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருப்பது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற 17 வயதுடைய சிறுமி புகார் அளித்துள்ளார். இவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, டி.பி.சத்திரம் பகுதியை சார்ந்தவர் சத்யா. இவனுக்கும் எனக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டது.
இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். நான் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். எனக்கும் - ஆட்டோ ஓட்டுநர் சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மலர்ந்தது.
நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காமுகன் சத்யா என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த நேரத்தில், இவனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ள செய்தி எனக்கு தெரியவந்தது.
என்னை ஏமாற்றிய காமுகனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரை காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், சிறுமியின் பெற்றோர் கடந்த 27 ஆம் தேதியில் இருந்து சிறுமி மாயமானதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பான புகார்களை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சத்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai drama lover cheated girl sexual abuse police arrest