#வீடியோ: கத்தியுடன் காவல் நிலையத்திற்கு எதிரில் பட்டப்பகலில் மோதல்.. அம்பத்தூரில் பரபரப்பு...!!
in ambattur two men fight video
தமிழகத்தின் சென்னையில் உள்ள அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள பகுதியில், ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொள்ளும் அதிர்ச்சி கண்காணிப்பு காமிரா காட்சிகள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், வர்ணம் பூசும் பணியாளராக பணியாற்றி வரும் ராஜன் மற்றும் கோதண்டராமன் ஒரே இடத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்களுக்கு தங்குமிடம் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், ராஜனின் மனைவி குறித்து கோதண்டராமன் தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன் மறுநாள் அம்பத்தூருக்கு சென்றுள்ளார்.
இந்த நேரத்தில், இவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துக்கொண்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த இருவரும் கத்திச்சண்டையில் ஈடுபட்டனர்.
இவர்களின் கத்தி சண்டையில் கோதண்டராமன் குத்தியதில் ராஜன் படுகாயமடைந்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராஜனை மருத்துவமனையில் அனுமதி செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோதண்டராமனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
in ambattur two men fight video