மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பழவூர்  பகுதியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும் முன்று குழந்தைகளும் உள்ளனர். சுடலையாண்டி அந்த பகுதியில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அவர் அடிக்கடி வெளியூர் செல்வதால் மனைவிக்கு வேறு ஒருவடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவதன்று அவரது வீட்டிற்கு சென்ற சுடலைபாண்டி ஜெயலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் வரவே சுடலையாண்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband kills His Wife Near Thirunelveli


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->