மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் மனைவியை அடித்து கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் வெளியில் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவி இறந்தது கூட தெரியாமல் ஆனந்தன் அவருடன் தூக்கியுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது தீபா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும் அவர் அருகில் ஆனந்தம் தூங்கிக் கொண்டிருந்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தீபாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் கணவனே மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband kills his wife Near Cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->