மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. சேலம் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  மாவட்டம், வேம்படிதாளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசங்கர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல  கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த குருசங்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மகள் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband Committed Suicide Near Salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->