கரூர் : மதுகுடிக்க பணம் தர மறுத்த மனைவி.! சரமாரியாக தாக்கிய கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி தமிழரசி (39). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குமார், மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் தமிழரசி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் மனைவி தமிழரசியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தமிழரசி இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மது அருந்த பணம் கொடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for assaulting wife who refused to pay for alcohol in karur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->