சாலையோர பாலத்தில் கார் மோதி விபத்து.! கணவன்-மனைவி பலி - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோர பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்துள்ளனர்.

சென்னை அடையார் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிஜேஸ்வரன். இவரது மகன் வங்கி ஊழியர் பிஸ்வாராஜன் (38). இவரும், இவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிஜய்குமார் சரண்(75), இவரது மனைவி மீரா சரண் (67) மற்றும் பிஸ்வாராஜன் வேலை பார்க்கும் வங்கியில் வேலை பார்க்கும் சுஜித் சுதாகரன் மனைவி அஞ்சனா (32) ஆகிய 4 பேரும் காரில் கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மீரா சரண் மற்றும் அவரது கணவர் பிஜய்குமார் சரண் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பிஸ்வாராஜன் மற்றும் அஞ்சனா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband and wife killed in car accident on roadside bridge in Pudukkottai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->