சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணம் கொடுத்து ரூ.2.76 கோடி கடன் மோசடி செய்த கணவன் மனைவி கைது.!
Husband and wife arrested for cheating case
சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணம் கொடுத்து ரூ.2.76 கோடி கடன் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தி நகரில் இயங்கிவரும் பைனான்ஸ் நிறுவனத்தில் எம்.ஆர் கார்டன் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு பொன்னம்மாள் ,ரவி, மஞ்சு மற்றும் பலர் சேர்ந்து சுமார் ரூ 2.76 கோடி கடன் பெற்றுள்ளனர். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இடத்தின் ஆவணத்தை அடமானமாக வைத்துள்ளனர்.
அந்த ஆவணத்தை சரி பார்த்த பொழுது அவை போலியானவை என்றும், மேலும் பத்திரப்பதிவு துறையினரால் ரத்து செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கணவன் மனைவி ரவி மற்றும் மஞ்சு ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Husband and wife arrested for cheating case