கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை.. கோவில்பட்டியில் பரபரப்பு.!
Husband and wife are killed by slitting their throats in kovilpatti
கோவில்பட்டியில் கணவன்-மனைவி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜபாண்டி(41). இவரது மனைவி பரணிசெல்வி(39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் இவர்கள் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். இதில் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதால் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்குள் கணவன்-மனைவி இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர். இதையழுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி போலீஸ் சார் தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband and wife are killed by slitting their throats in kovilpatti