தொழிலில் நஷ்டம்.! ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆதம்பாக்கத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சுப்புராயலு(60). இவர் இரண்டு ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் சுப்புராயலு சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் சுப்புராயலுவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுப்புராயிலு உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொரோனா காலத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 

ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்த சுப்புராயலு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hotel owner commits suicide in chennai adampakkam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->