ஹிஜாப் விவகாரம் : நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த.. தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது.!
Hijab affair Tawheed Jamaat executive arrested for threatening to kill judges
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கடந்த மார்ச் 17ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தலைமையேற்று பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹ்மதுல்லா கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய 3 பேர் மீது சாதி, மத, இனம், சமயம் சம்பந்தமாக விரோத உணர்ச்சியை தூண்டுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நெல்லையில் பதுங்கியிருந்த ரஹ்மதுல்லாவை மதுரை தனிப்படையினர் கைது செய்து மதுரைக்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். மேலும், இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Hijab affair Tawheed Jamaat executive arrested for threatening to kill judges