இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: சற்றுமுன் தமிழக போலீசார் வழக்கு பதிவு.!
Helicopter crash tn police case file
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுடன் சென்றபோது, குன்னூர் அருகே காட்டேரி மலைபாதையின் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இன்று அவர்களின் உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக குன்னுர், காட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் இந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில் 13 பேர் பலியாகி உள்ள நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இயற்கைக்கு மாறான மரணம் சட்டப்பிரிவு 174 என்ற சட்டப்பிரிவின் கீழ் காட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து என்ற வகையிலும் காட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Helicopter crash tn police case file