கன்னியாகுமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக லட்சுமணன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் பள்ளிக்கு சென்று நேரடியாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .

அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உறுதியானது இதனை அடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmaster Arrested In POCSO at Nagarkovil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->