விஜயிடம் நச்னு சொன்ன குருமூர்த்தி..கப்சிப் விஜய்.. விஜய் கட்டுப்பாடு காட்ட வேண்டிய நேரம் இது– அரசியல் விமர்சகர் லட்சுமணன் கருத்து - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவால், திமுகவுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை எனவும், இதற்கான சட்ட நடைமுறை வழக்கமான ஒன்றே எனவும் அரசியல் விமர்சகர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லட்சுமணன் கூறியதாவது:“கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு ஒரு பின்னடைவு அல்ல. விஜய்யை சிக்க வைக்க வேண்டுமானால், இந்த அரசு எப்போதோ அவரின் பெயரை எஃப்ஐஆரில் சேர்த்திருக்கும். இதுவரை விஜயின் பெயர் சேர்க்கப்படவில்லையே… எனவே இது வழக்கமான சட்ட நடவடிக்கை மட்டுமே.”

அவர் மேலும் கூறினார்:“நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சிபிஐ விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் குறைந்தது மூன்று மாதங்கள் இந்த விசாரணை நீடிக்கும். அப்படியானால் அந்தக் காலத்தில் விஜய் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போகிறாரா? அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் இதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப் போவதில்லை. இப்போதைக்கு எல்லோரும் அடுத்தடுத்த நகர்வை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

லட்சுமணன் மேலும் வலியுறுத்தியதாவது:“கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு தெளிவான அறிவுறுத்தல் விடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ட்வீட்டாவது போட்டு, ‘நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கலாம். திருச்சி விமான நிலைய சம்பவத்துக்குப் பிறகாவது ஒரு அறிக்கை வெளியிட வேண்டியிருந்தது. அப்படி செய்திருந்தால் விஜய் உண்மையான முன்னுதாரண தலைவராக மாறியிருப்பார். ஆனால் இதுவரை அமைதியாக இருப்பது ஒரு தவறு.”

அவர் மேலும் சுட்டிக்காட்டினார்:“இன்றும் விஜய் தன்னுடைய ரசிகர்கள், தொண்டர்கள் ஆகியோரிடம் தெளிவான வழிகாட்டல் வழங்கவில்லை. தன்னுடைய தொண்டர்களாக அல்ல, இன்னும் ரசிகர்களாகவே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதை மாற்றுவது விஜயின் பொறுப்பு. மற்ற கட்சிகளுக்கே இல்லாத கட்டுப்பாடு தவெகவுக்கு மட்டுமே இருக்கிறது.”

அதே நேரத்தில், அரசியல் பார்வையில் விஜயின் தற்போதைய அணுகுமுறையை விமர்சித்த லட்சுமணன் கூறினார்:“விஜய் பலமுறை ‘கொள்கை எதிரிகள்’ என்று கூறி பாஜகவுக்கு எதிராக பேசுகிறார். ஆனால் மறைமுகமாக அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. குருமூர்த்தியுடன் சந்தித்தது பற்றி எந்த மறுப்பும் விஜயின் தரப்பில் இருந்து வரவில்லை. இது வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது.”

முடிவாக, லட்சுமணன் கூறியதாவது:“இப்போது சிபிஐ விசாரணை கிடைத்திருப்பதையே சிலர் வெற்றி, சிலர் தோல்வி என்று சொல்கிறார்கள். ஆனால் கரூரில் உயிரிழந்த 41 பேரைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. வழக்கமான சட்ட நடைமுறையாக இந்த விசாரணை தொடரும். இதனால் தமிழக அரசியலில் பெரிய மாற்றமோ, திமுகவுக்கு பின்னடைவோ எதுவும் ஏற்படாது.”

அவரின் இந்த கருத்துகள், கரூர் சம்பவத்தைச் சுற்றியுள்ள அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gurumurthy told Vijay to dance Kapsib Vijay It time for Vijay to show restraint Political commentator Lakshmanan comments


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->