தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் பழைய ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்துதல் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நெருங்கி உள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் தேர்வு பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மாணவர்களின் நலம் கருதி உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

ஆனால் அதனை ஏற்க மறுத்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt school teacher continue hunger strike today onwards


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->