இருசக்கர வாகனம் மோதி அரசு ஊழியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதி அரசு ஊழியர் உயிரிழந்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் சின்னமுரட்டுபட்டியை சேர்ந்த மாதவன் என்பவருடைய மகன் வினோத்(26). இவர் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வினோத் வேலைக்கு செல்வதற்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்பு நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது வாணியம்பாடி நோக்கி சுமதி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி வினோத் மீது மோதியது.

இதில் வினோத் மேம்பாலத்திலிருந்து தடுப்பில் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் படுகாயம் அடைந்த சுமதியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுயடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt employee killed in twowheeler collision in dharmapuri


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->