ஓடும் ரெயிலில் பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறிய அரசு கல்லூரி பேராசிரியர்.! அதிரடி காட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஓடும் ரெயிலில் பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறிய அரசு கல்லூரி பேராசிரியர்.! அதிரடி காட்டிய போலீசார்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தங்கி கல்வி பயின்று வந்தார். 

இந்த நிலையில் அந்த பெண் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்காக நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். 

இதையடுத்து இந்த ரெயில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது பயணிகள் ரெயில் நிலையத்தில் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். அதன் படி போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதினர்.

"அதில், அந்த நபர் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காட்டு பகுதியை சேர்ந்த சந்திர பிரசாத் என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

ஓடும் ரெயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

govt college professer arrested for sexuall harassment in train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->