முன்னறிவிப்பு இல்லாமல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்...! கதறி அழும் கோழி பண்ணை உரிமையாளர்....! - Seithipunal
Seithipunal


விருதுநகர் சிவகாசியிலுள்ள பி.திருவேங்கிடபுரம் கிராமத்தில் ராஜபாளையம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக, சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்துபாண்டியன் என்பவர் அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.இவர் சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் நிலுவைத் மின்கட்டண தொகையாக ரூ.26,765 இருந்துள்ளது.

அதனுடன் கடந்த மாதத்திற்காண மின் கட்டண தொகை ரூ.22,233 தொகையை செலுத்த வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் இருந்துள்ளது.இதனிடையே, நேற்று கடந்த மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே நிலவையிலுள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான ரூ.49719-ஐ அவர் செலுத்தியுள்ளார். கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே மின்வாரிய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால் மின் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழிப் பண்ணைக்கு வந்த போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த ஏ.சி. செயல்படாமலும், வெப்பம் தாங்காமலும் 14000 கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தது. இதைக் கண்டு நிலைகுலைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் செல்லமுத்து பாண்டியன் செய்வதறியாது திகைத்து நின்றார்.

இதனால் நடந்ததை கூறி அதிகாரியிடம் புலம்பியுள்ளார்.நடந்த இந்நிகழ்வினால், சுமார் 40 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாவும், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் தனக்கு அரசு கருணை அடிப்படையில் உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் கதறி அழும் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government officials acted without warning A crying poultry farm owner


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->