தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.! - Seithipunal
Seithipunal


ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த பேருந்தில் 23 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government bus collides with retaining wall in Namakkal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->