தலைக்கேறிய மது போதை.. நண்பனை கொலை செய்த இளைஞர்.. திருவாரூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வையாகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் ஜெய்சங்கருடன் அங்கு நடந்த படத்திறப்பு விழாவிற்கு சென்று வந்தனர். அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். மது அருந்திய பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, வாக்குவாதம் முற்றவே தான் வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் ஜெய்சங்கரை வெட்டினார்.

இதில், ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, மணிகண்ட காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Friend Killed His Friend in Thiruvarur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->