பிரெஞ்சு பெண் பாலியல் வன்கொடுமை..சுற்றுலா வந்தபோது நேர்ந்த கொடுமை!
French woman sexual assault the atrocity that happened during the tour
பிரபல சுற்றுலா தலமான உதய்பூரில், ஒரு பிரெஞ்சு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது தொடர்பாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பெண், தனது இரு பெண் நண்பர்களுடன், ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காக உதய்பூருக்கு வந்திருந்தார். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் செய்திருந்தது. பாதிக்கப்பட்டவர் ஒரு வருட விசாவில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த நிறுவனம் சார்பில் இருந்த சில ஊழியர்களுடன், அவர்கள் உதய்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் ஹில்ஸ் உணவகத்தில் இரவு உணவு உண்பதற்காக சென்றனர். அங்கு மதுபானம் அருந்தியதற்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வேளையில், ஊழியர் சித்தார்த் "நகரை சுற்றிக் காட்டுவதாக" கூறி, பிரெஞ்சு பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்றார். பின்னர், தனது ஹோட்டல் அறையில் தன் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மகளிர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உணவகம் மற்றும் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்படுகின்றன. மற்ற ஊழியர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. சிறப்பு குழு அமைக்கப்பட்டு, குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இந்த சம்பவம் குறித்து பிரெஞ்சு தூதரகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
English Summary
French woman sexual assault the atrocity that happened during the tour