திடீர் ஆய்வு மேற்கொண்ட மா.சுபிரமணியன்...! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் என்ன...?
Ma Subramanian conducted surprise inspection What was shocking incident that happened hospital
வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் பல்நோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு வழியாக சென்றார்.

அச்சமயம், மேல்விஷாரத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த படியும், பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் வெளியே காத்திருந்ததை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சென்று இது குறித்து தகவல் கேட்டார்.
மேலும், காத்திருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் மின்விசிறி, இருக்கை, குடிநீர் என எதுவும் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். அங்கு காத்திருக்கும் அறையை கூட திறக்காமல் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய 5 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை.
இதில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாடினார். இந்தப் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலதாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும், அதேபோல் விளக்கம் கொடுத்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ma Subramanian conducted surprise inspection What was shocking incident that happened hospital