மதரீதிப் பிரச்சாரத்தில் பா.ஜ.க மக்களின் கவனத்தைத் திருப்ப முயற்சி..முத்தரசன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ச்சியாக புறக்கணித்து வஞ்சித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:2014 முதல் 2024 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்காக ரூ.2,532.59 கோடி செலவிடப்பட்ட நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரியா ஆகிய தென்னிந்திய மொழிகளுக்காக வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மீது தொடர்ந்து வஞ்சக நிலைப்பாடு தொடர்கிறது.

இந்தி பாட மொழியாக சேர்க்கப்படாத பள்ளிகளுக்கு நிதி மறுக்கப்பட்டு வருகிறது. இது மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இதற்காக ஆய்வை முன்னெடுத்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா இடமாற்றம் செய்யப்பட்டதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட ரூ.50,000 கோடி இழப்பிற்கு தமிழ்நாடு அரசு மத்திய நிதி கோரியபோதும் உதவி வழங்கப்படவில்லை.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, வேலை நாட்கள் 50% குறைக்கப்பட்டு, உடல் உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் எதிர்க்கும் பாஜக அரசின் மதரீதிப் பிரச்சாரம் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை திருப்ப முயல்கிறது. இது ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the campaign of religious extremism an attempt by the BJP to divert the attention of the people Muthurasans condemnation


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->