வேளாங்கண்ணிக்கு வரும் போது சோகம் - வேன் கவிழ்ந்து 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு நேற்று இரவு பக்தர்கள் சிலர் ஒரு வேனில் புறப்பட்டனர். அதன் படி இந்த வேன் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் படி, போலீஸார் விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

புன்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வந்த பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for accident in velanganni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->