ஆட்சிக்கு வந்த 5 வாரத்தில்.. 4 லாக் அப் மரணங்கள்!அமைதி காக்கும் விஜய்?காவல் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் குரல்கள் அதிகரிப்பு!
Four custodial deaths within five weeks of taking office Is Vijay remaining silent Growing calls for police reforms
தமிழகத்தில் சமீப காலமாக பதிவாகியுள்ள காவல் மற்றும் சிறைக் காவல் மரணங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றன. காவல் துறை சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காவல் துறை அத்துமீறல்கள் மற்றும் லாக்-அப் மரணங்கள் குறித்து கடுமையாக விமர்சித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். மேலும், ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமீப மாதங்களில் காவல் மற்றும் சிறைக் காவலில் உயிரிழந்ததாக பதிவான சில சம்பவங்கள் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை, நாகர்கோவில், புழல் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
குறிப்பாக, நாகர்கோவில் சிறைக் காவல் மரணம் தொடர்பாக மூன்று சிறை ஊழியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை சில தரப்பினர் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், தனிப்பட்ட நடவடிக்கைகளுடன் மட்டுப்படாமல் காவல் துறை மற்றும் சிறை நிர்வாகத்தில் விரிவான சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தவெக கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைச்சர் வன்னி அரசு, காவல் துறை சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளில், காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கண்காணிப்பை முழுமையாக அமல்படுத்துதல், கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுதல், சிறைகளில் பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் வகையில் மாநில அளவில் கூடுதல் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
English Summary
Four custodial deaths within five weeks of taking office Is Vijay remaining silent Growing calls for police reforms