ஆந்திராவில் இருந்து காரில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள்! வனத்துறையினர் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் இருந்து காரில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான சைனகுண்டா பகுதியில் வனத்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்த டொயோட்டா காரை வன அலுவலர்கள் வழிமறித்து சோதனை செய்த போது காரில் இருந்த அனைவருமே தப்பி ஓடினர்.

சந்தேகித்த வன அலுவலர்கள் வாகனத்தை சோதனை செய்து பார்க்கும் பொழுது அதில் சுமார் 500 கிலோ எடையுள்ள 17 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனுடைய மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் செம்மரக்கட்டைகளை  பறிமுதல் செய்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Forest officers caught red sandalwood


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->