காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் இந்த இரண்டு அணைகளிலும் முழுமையாக நீர் நிரம்பியுள்ள நிலையில் அணைகளின் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லிற்கு வரும்  சுற்றுலா பயணிகளுக்கு இன்று 7-வது நாளாக தொடர்ந்து குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood warning for Cauvery coastal people


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->